×

ம.பி-யில் சரக்கு ரயிலில் தீ: 2 ஓட்டுநர்கள் காயம்

ஷாதூல்: மத்திய பிரதேச மாநிலம் ஷாதூல் நகரில் சிங்பூர் ரயில் நிலையம் அருகே 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் இன்று மோதி கொண்டன. மோதிய வேகத்தில் ஒரு ரயிலின் இன்ஜின் மற்றொரு ரயிலின் மீது ஏறியது. இந்த சம்பவத்தில் இரு ரயில் இன்ஜின்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. இந்த விபத்தில் இரு ரயில்களின் ஓட்டுநர்களும் காயமடைந்தனர். மேலும் 2 ரயில்வே பணியாளர்கள் விபத்தில் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணிக்காக சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர். இதனால், பிலாஸ்பூர் மற்றும் கத்னி வழியே செல்லும் ரயில் போக்குவரத்து பாதித்தது.

The post ம.பி-யில் சரக்கு ரயிலில் தீ: 2 ஓட்டுநர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Shahdol ,Singpur railway ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED மபி வனப்பகுதியில் சென்ற போது...