×

பூதலூரில் டூவீலர் மோதி முதியவர் சாவு

திருக்காட்டுப்பள்ளி, ஏப்.19: பூதலூர் ஜீவா நகர் கோவிந்தராஜ் மகன் உத்திராஜ் (77). இவர் நேற்று முன்தினம் பூதலூர் தனியார் திருமண மண்டபம் அருகில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உத்திராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து பூதலூர் எஸ்ஐ ஜெகஜீவன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

The post பூதலூரில் டூவீலர் மோதி முதியவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Boothalur ,Thirukkatupalli ,Govindaraj ,Uddhiraj ,Boothalur Jeeva Nagar ,
× RELATED தஞ்சாவூர் பெரியகோயிலில் குவிந்த...