×

4 மாவட்டங்களில் கலக்கிய பைக் திருடர்கள் 5 பேர் கைது

ஒரத்தநாடு, ஏப்.19: தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விலை உயர்ந்த பைக்குகள் திருடிய 5 இளைஞர்களை ஒரத்தநாடு போலீசார் நேற்று கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த நெய்வாசல் கிராமத்தை சேர்ந்த ராஜலிங்கம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட எஸ்பி ஆசிஷ்ஷராவத் உத்தரவின் பேரில் ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடி கேமராக்களை ஆய்வு செய்து, தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிர தேடுதல்வேட்டை நடத்தினர். அப்போது, மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையை சேர்ந்த ஆகாஷ் என்ற துணைவன் (21), அவரது கூட்டாளிகள் நீடாமங்கலம் சஞ்சய் (20), வடுவூர் முனீஸ்வரன் (23), ஒரத்தூர் பாலாஜி (23), வலங்கைமான் கவியரசன்(21) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 9 பைக்குகளை பறிமுதல் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.17 லட்சம் ஆகும். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு மற்றும் நெய்வாசல், தஞ்சை, சென்னை, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புல்லட் மற்றும் விலை உயர்ந்த பைக்குகளை திருடி ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 4 மாவட்டங்களில் கலக்கிய பைக் திருடர்கள் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Orathanadu ,Tanjore ,Thiruvarur ,Nagapattinam ,Chennai ,Dinakaran ,
× RELATED ஒரத்தநாட்டில் தீ தொண்டு நாள், வார...