×

நுரையுடன் குவியல் குவியலாகவெளியேறும் ரசாயன கழிவுகள்

ஓசூர், ஏப்.19: ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து குவியல், குவியலாக ரசாயன கழிவுநீர் நீர் துர்நாற்றத்துடன் நுரை பொங்கி வெளியேறுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் நந்தி மலையில் உற்பதியாகும் தென்பெண்ணை ஆறு, அங்குள்ள வரத்தூர் ஏரி வழியாக பெங்களூர் பெருநகரத்தின் கழிவுநீர் கலந்தும், தென்பெண்ணை ஆற்றின் எல்லையோரமாக உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீர் கலந்து தமிழகத்தின் கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது. இந்நிலையில், ேநற்று காலை தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீர் துர்நாற்றம் வீசி, அதில் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் பொங்கி செல்கிறது. கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று 410 கன அடியாக இருந்தாலும் நுரையின் அளவு அதிகரித்துள்ளது. 410 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.நாளுக்குநாள் அணைப்பகுதிகளில் அதிகரித்து வரும் ரசாயன நுரைகளால் ஓசூர் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

The post நுரையுடன் குவியல் குவியலாக
வெளியேறும் ரசாயன கழிவுகள்
appeared first on Dinakaran.

Tags : Hosur ,Hosur Kelavarapalli dam ,Dinakaran ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்