×

பெண் காவலரை தள்ளிவிட்ட வாலிபர் கைது

பெரம்பூர்: அயனாவரம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் பிரபா. நேற்று முன்தினம் மாலை அயனாவரம் பிஇ கோயில் தெருவில் சிலர் குடிபோதையில் தகராறில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்தது. இதையடுத்து, பெண் காவலர் செல்வி, பிரபா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அப்போது அதிக குடிபோதையில் இருந்த அயனாவரம் பிஇ கோயில் 2வது தெருவைச் சேர்ந்த ரவி (28) என்பவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், பெண் காவலர் பிரபாவை கீழே தள்ளிவிட்டார். இதில் லேசான காயம் அடைந்த பிரபா, அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அயனாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரவியை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெண் காவலரை தள்ளிவிட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Prabha ,Ayanavaram ,Ayanavaram PE ,Dinakaran ,
× RELATED ஆந்திராவில் இருந்து சென்னைக்கு...