×

கூல்டிரிங்ஸ் என நினைத்து கொசு மருந்து குடித்த குழந்தை பரிதாப பலி

பல்லாவரம்: பம்மல், பாத்திமா நகர், வெள்ளச்சாமி தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது 3 வயது குழந்தை கிஷோர். நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிஷோர், வீட்டில் வைத்திருந்த கொசு மருத்தை எடுத்து, கூல்டிரிங்க்ஸ் என நினைத்து குடித்துள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை அளித்தனர். ஆனால், சில நிமிடங்களில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். குழந்தையின் சாவுக்கு மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம் எனக்கூறி குழந்தையின்  உறவினர்கள் மருத்துவமனை எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மருத்துவமனை நிர்வாகம் குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும் குழந்தை இறந்தப்பின்பு முறையாக ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவில்லை என்றும் குற்றம் சாட்டினர். சுமார் அரை மணிநேரம் போராட்டம் நடந்தது, இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். …

The post கூல்டிரிங்ஸ் என நினைத்து கொசு மருந்து குடித்த குழந்தை பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Vellachami Street ,Fatima Nagar, Pammel ,Kishore ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை