×

நிலம் அளவீடு செய்ய லஞ்சம்: பெண் சர்வேயர் கைது

சென்னை: திருவள்ளூர்  மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரத்தை சேர்ந்த திருவேங்கடம் மனைவி புவனேஸ்வரி, தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சர்வேயர் தேவி (30) என்பவரை அணுகியுள்ளார். அவரை பலமுறை  அலைக்கழித்த தேவி, ரூ.3,500 கொடுத்தால் சர்வே செய்வேன் என்று  கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத புவனேஸ்வரி  இதுபற்றி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை நேற்று சர்வேயர் தேவியிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவரை கையும் களவுமாக கைது  செய்தனர்….

The post நிலம் அளவீடு செய்ய லஞ்சம்: பெண் சர்வேயர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Thiruvenkadam ,Bhubaneswari ,Palapuram ,RKpet, Tiruvallur district ,Dinakaran ,
× RELATED திருவேங்கடம் அருகே பயங்கரம் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்