×

முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்டங்கள் குறித்தான சிறப்பு விழிப்புணர்வு முகாம் மயிலாடுதுறையில் நாளை நடக்கிறது

மயிலாடுதுறை,ஏப்.18: மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கோட்டங்களில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்தான சிறப்பு விழிப்புணர்வு முகாம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் தலைமையில் நாளை (19ம்தேதி) காலை 11 மணியளவில் மயிலாடுதுறை மாவட்ட கூட்ட அரங்கிலும், 28ம்தேதி காலை 11 மணியளவில் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கோட்டங்களை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.

The post முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்டங்கள் குறித்தான சிறப்பு விழிப்புணர்வு முகாம் மயிலாடுதுறையில் நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Mayiladuthuram ,Mayaladudurai ,Mayiladududurra ,Seeraksha Kotas ,Mayiladuram ,
× RELATED சிசிடிவி கேமரா அமைப்பது எதற்காக?குட்டிக்கதை கூறி எஸ்பி விளக்கம்