×

கொளுத்தும் வெயிலில் பத்திக்கிச்சோ ரோட்டில் நின்ற பைக் தீப்பிடித்து எரிந்து நாசம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரோட்டில் நின்ற பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. திருநெல்வேலி மாவட்டம் ராயகிரியைச் சேர்ந்தவர் ராஜாராம் (35). நாகர்கோவிலில் மருந்து விற்பனை நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மனைவி இளவரசி மற்றும் மகளுடன் ஆசாரிபள்ளம் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று காலை 10.45 மணி அளவில் மனைவி மற்றும் மகளுடன் பைக்கில் மணிமேடை பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வந்தார். அப்பகுதியில் உள்ள டீ கடை முன் பைக்கை நிறுத்தி விட்டு டீ சாப்பிட சென்றனர். மீண்டும் திரும்பி வந்த போது திடீரென பைக்கின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் பைக் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். கடைகளுக்கு எதிரே பார்க்கிங் பகுதியில் பைக்கை நிறுத்தி இருந்தால் நூற்றுக்கணக்கான பைக்குகள் எரிந்து நாசமாகி இருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பைக்கில் குறைபாடு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது கொளுத்தும் வெயிலில் தீ பிடித்ததா? என்பது தெரியவில்லை என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

The post கொளுத்தும் வெயிலில் பத்திக்கிச்சோ ரோட்டில் நின்ற பைக் தீப்பிடித்து எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Pattikicho Road ,Nagarkovil ,Rajaram ,Rayagiri, Tirunelveli district ,Bathakicho Road ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம்