×

கல்வித்துறையில் ஊழல் விவகாரம்; திரிணாமுல் எம்எல்ஏ கைது: இன்று காலை சிபிஐ அதிரடி

கொல்கத்தா: கல்வித் துறையில் நடந்த ஊழல் விவகாரம் தொடர்பாக திரிணாமுல் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவை இன்று காலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பர்வானில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா வசித்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள், அவர் மீது ஏற்கனவே கூறப்பட்ட வேலை வாய்ப்பு ஊழல் வழக்கு ெதாடர்பான விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘மேற்குவங்க மாநில அரசு உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா மீது வழக்குபதியப்பட்டது. பர்வான் தொகுதி எம்எல்ஏவான இவரிடம், கடந்த 14ம் தேதி முதல் விசாரித்து வருகிறோம். நேற்றைய விசாரணையின் போது அவர் தன்னிடம் இருந்த 2 செல்போனில் ஒன்றை வீட்டை ஒட்டிய குளத்தில் வீசி எறிந்தார். பின்னர் அந்த செல்போன் மீட்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை ஜிபன் கிருஷ்ணா சாஹாவை கைது செய்து விசாரித்து வருகிறோம். சிஆர்பிஎப் பாதுகாப்பு புடைசூழ விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

The post கல்வித்துறையில் ஊழல் விவகாரம்; திரிணாமுல் எம்எல்ஏ கைது: இன்று காலை சிபிஐ அதிரடி appeared first on Dinakaran.

Tags : Trinamul ,MLA ,CBI ,Kolkata ,Trinamool ,Giban Krishna Saha ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...