- நலன்புரி மானிய வைபவம்
- மதுரை
- ரம்ஜான்
- பெருநகர மாவட்ட காங்கிரஸ் குழுவின் சிறுபான்மை பிரிவு
- நரிமேடு
- தின மலர்
மதுரை, ஏப். 17: மதுரை நரிமேடு பகுதியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு சார்பில் ரம்ஜான் நோன்பையொட்டி ஏழை – எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல் மாலிக் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட கமிட்டி தலைவர் கார்த்திகேயன் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலையை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி பொன்.சேது, கவுன்சிலர்கள் ஜெய்ஹிந்துபுரம் முருகன், தல்லாகுளம் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு, நிர்வாகி எஸ்.கபீர், மகிளா மாவட்ட தலைவி ஷாநவாஸ் பேகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா appeared first on Dinakaran.