- வீதியுலா
- நம்பெருமல்
- அனுமந்தா
- வாகன்
- திருச்சி
- அனுமந்த வாஹனம்
- சித்திரை தேர்த்திருவிழா
- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
- அனுமந்த வீதியுலா
திருச்சி, ஏப். 16: ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயில் சித்திரை தேர்த்திருவிழாவின் ஐந்தாம் திருநாளையொட்டி நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் சேவை சாதித்தார். பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாதம்தோறும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை மாதம் நடைபெறும் தேர்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் 5ம் திருநாளான நேற்று நம்பெருமாள் காலை சேஷ வாகனம், மாலை அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். அதிகாலை 3.30 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் 3.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார்.
அதிகாலை 4.30 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து 6 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பட்டு நூல்கார ஆஸ்தான மண்டபத்திற்கு 11 மணிக்கு வந்தடைந்தார். மாலை 6 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து அனுமந்த வாகனத்தில் புறப்பட்ட நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். இரவு 9 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் இரவு 9.15 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார்.
தேர்திருவிழாவின் 6ம் திருநாளான இன்று அதிகாலை 3.30 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு 3.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து 6 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். தொடர்ந்து காலை 7.15 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நாகப்பிள்ளை ஆஸ்தான மண்டபத்திற்கு பகல் 12 மணிக்கு வந்தடைகிறார். மாலை 6 மணிக்கு தோளுக்கினியானில் இருந்து புறப்பட்டு 6.45 மணிக்கு யானை வாகன மண்டபம் வந்தடைகிறார்.
இரவு 7.45 மணிக்கு யானை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து 8.45 மணிக்கு யானை வாகன மண்டபம் வந்தடைகிறார். இரவு 9.15 மணிக்கு உள் ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றி கொண்டு இரவு 9.15 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார். நாளை மாலை நெல்லளவு கண்டருளிகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
The post நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் வீதியுலா appeared first on Dinakaran.