×

பொதுமக்களுக்கு இடையூறு செய்த 2 ரவுடிகள் கைது

அயோத்தியாப்பட்டணம், ஏப்.16: அயோத்தியாப்பட்டணம் அடுத்த வெள்ளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (46). அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (38). இருவரும், காட்டூர் ஆனந்தனின் கொலை வழக்கில் எதிர் கோஷ்டியினரின் நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் நேற்று, பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக, காரிப்பட்டி போலீசாருக்கு புகார் வரப்பெற்றது. இதை தொடர்ந்து விசாரணை நடத்திய காரிப்பட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

The post பொதுமக்களுக்கு இடையூறு செய்த 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Ayodhyapatnam ,Saravanan ,Velliampatti ,Manikandan ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு