×

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் புதிதாக பல பாடப்பிரிவுகள் தமிழ்நாட்டில் அறிமுகம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் பல கல்லூரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்துள்ளது. தற்போது எந்த கல்லூரியில், எந்த துறையை எடுக்கலாம் என மாணவ-மாணவிகள் யோசித்து கொண்டுள்ளனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க யோசித்து கொண்டிருக்கின்றனர். மாணவ-மாணவிகள் பலரும் மே 7ம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கு, தங்களை தயார் படுத்தி வருகின்றனர். அதேபோல் கலை மற்றும் அறிவியல், இன்ஜினியரிங் படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டில், இன்ஜினியரிங் படிப்புக்கு என்ன டிமாண்ட் இருந்ததோ, அதே அளவுக்கு கலை மற்றும் அறிவியல் படிப்புக்கும் இருந்தது. அந்த அளவிற்கு மாணவர்கள் போட்டி போட்டு கொண்டு கல்லூரிகளில் சேர்ந்தனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை பொறுத்தவரை, பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ மற்றும் பி.ஏ போன்ற பாடப்பிரிவுகளைத்தான் மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். இவை மட்டுமல்லாமல் தற்போது உள்ள காலகட்டத்துக்கு ஏற்றார்போல் வேலை வாய்ப்பினை எளிதில் பெறும் பல புதுவிதமான பாடப்பிரிவுகளும் பல கல்லூரிகளில் உள்ளன. அதனை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி தங்களுக்கான துறையை தேர்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி முதல்வர் ரம்யா கூறுகையில், ‘‘நவீன காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் இதுபோன்ற புதிய படிப்புகள் மாணவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் என இரு பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புகள் தனித்தனியாக நடைபெற்று வருகிறது. அரசு உதவிப்பெறும் மாணவர்களுக்கு அவர்களுக்கான உதவித்தொகை எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து தருகிறோம். அதேபோல் சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் 15% வரை குறைத்து உதவிகள் செய்து வருகிறோம். மேலும் இதுபோன்ற மாணவர்களுக்கு அன்னப்பூரணி திட்டத்தின் கீழ் உணவுகளும் வழங்கி வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் புதிதாக பல பாடப்பிரிவுகள் தமிழ்நாட்டில் அறிமுகம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,CHENNAI ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...