×

கும்பகோணம் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை-ஆர்டிஓ விசாரணை

கும்பகோணம் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையைச் சேர்ந்தவர் மாணிக்கராஜா (25). அதே பகுதியில் மரப்பட்டறையில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்த தீபா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 2 மாதங்கள் ஆன நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை கணவர் மாணிக்கராஜா வேலைக்குச் சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தபோது மனைவி தீபா வீட்டின் மாடி அறையில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தீபாவை மாணிக்கராஜா பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மருத்துவமனையில் டாக்டர்கள் தீபாவை பரிசோதித்து பார்த்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தீபாவின் தாய் கற்பகம் தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து பாபநாசம் டிஎஸ்பி பூரணி, சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்தனர். தீபாவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால், ஆர்டிஓ பூர்ணிமா விசாரணை நடத்தி வருகிறார்.

The post கும்பகோணம் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை-ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.

Tags : -RTO ,Kumbakonam ,Manikaraja ,Tirupaleidad ,Babanasam, Thanjavur District ,RTO ,Dinakaran ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...