ஓசூர், ஏப்.14: ஓசூர் அடுத்த நல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி அருகே, திருச்சி கனிம வள பிரிவு இணை இயக்குனர் ஜெகதீசன் தலைமையிலான அதிகாரிகள், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தபோது, அதில் 2 யூனிட் கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரி ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில், ஓசூர் அட்கோ போலீசார் லாரியை பறிமுதல் செய்து டிரைவர், உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், பாகலூர் மற்றும் உத்தனப்பள்ளி ஒபேபாளையம் பகுதியில், கற்களை கடத்தி வந்த 2 லாரிகளை, உத்தனப்பள்ளி போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கற்கள் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.