×

மைத்துனர் பைக்கை எரித்த மாமா கைது

பெரம்பூர்: வியாசர்பாடி கல்யாணபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் பானுப்ரியா. இவர் தனது கணவர் அஜித்குமாருடன் சண்டை போட்டுவிட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2 குழந்தைகளுடன் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார். கடந்த மாதம் 2ம் தேதி பானுப்ரியா தனது 2வது மகனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளார். இதில், தனது கணவர் அஜித்குமாரை அழைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு மது போதையில் தனது மாமியார் வீட்டுக்கு வந்து, வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அவரது மைத்துனர் கிஷோர்குமாரின் பைக்கை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து கிஷோர்குமார் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் அஜித்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

The post மைத்துனர் பைக்கை எரித்த மாமா கைது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Vyasarbadi ,Kallyanapuram 3rd Street, Panubriya ,Ajitkumar ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு