- ரெயின்போ ஃபோரம் போட்டி
- சிவகங்கை
- சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி
- மாவட்ட அளவிலான வானவில் மன்றத்தின் தனிநபர் போட்டி
- தமிழக அரசு…
- தின மலர்
சிவகங்கை, ஏப்.13: சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் மாவட்ட அளவிலான வானவில் மன்ற தனி நபர் போட்டிகள் நடைபெற்றன. மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தராஜன் தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீதாலெட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் ஸ்டீபன் வரவேற்றார். ஆசிரியர்கள் சாஸ்தாசுந்தரம், அனந்தகிருஷ்ணன் நடுவர்களாக இருந்தனர். நேர்முக உதவியாளர் சம்பத்குமார் கருத்துரை வழங்கினார். வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்கள் லலிதா, மங்கையற்செல்வி, சித்ரா, பிரின்ஸி, தீபா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாவட்டத்தில் இருந்து வட்டார அளவில் வெற்றி பெற்ற 70க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் போட்டியில் வைக்கப்பட்டன. படைப்புகள் குறித்து மாணவர்கள் விளக்கம் அளித்தனர். பள்ளி துணை ஆய்வாளர் பூவலிங்கம் நன்றி கூறினார்.
The post சிவகங்கையில் வானவில் மன்ற போட்டி appeared first on Dinakaran.