×

திண்டுக்கல் குடகனாறு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

திண்டுக்கல், ஏப். 13: திண்டுக்கல் அருகே அகரம் பேரூராட்சி காமாட்சிபுரம் காலனி அருகே உள்ள கொடகநாற்று கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் அருகே அகரம் பேரூராட்சி காமாட்சிபுரம் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் குடகனாற்றுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும்படி கூறியிருந்தனர். ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை, எனக் கூறி தமிழ்ப்புலிகள் கட்சி மாணவர் அணி மாவட்ட செயலாளர் கணேசபிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

The post திண்டுக்கல் குடகனாறு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dindigul Kudakanar canal ,Dindigul ,Kodakanaru canal ,Dindigul Akaram Parishad ,Kamachipuram Colony ,Dindigul Kodakanaru canal ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...