காத்மண்டு: நேபாளத்தின் இமயமலையில் திடீர் பனிச்சரிவில் சிக்கி 3 ஷெர்பாக்கள் மாயமாகி உள்ளனர். நேபாளத்தின் இமயமலையின் அடிவாரத்தில் மலையேற்றத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு வழிகாட்டியாக செயல்படும் ஷெர்பாக்களின் முகாம் கும்பு என்ற பகுதியில் உள்ளது. மலையேற்றத்தில் ஈடுபடும் வீரர்களுக்கான உபகரணங்களை எடுத்து கொண்டு ஷெர்பாக்கள் நேற்று சென்று கொண்டிருந்தனர். அப்போது,5,700 மீட்டர் உயரத்தில் இருந்து பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கி 3 ஷெர்பாக்கள் மாயாகினர். இதுகுறித்து இமயமலை முகாம் மீட்பு படையின் ஒருங்கிணைப்பாளர் தெம்வா டென்சிங் ஷெர்பா கூறுகையில், ‘‘மாயமான 3 பேரும் 6 மீட்டர் அடி ஆழத்துக்குள் புதையுண்டனர். அதனால் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு’’ என்றார்.
The post இமயமலையில் பனிச்சரிவு: ஷெர்பாக்கள் 3 பேர் மாயம் appeared first on Dinakaran.