×

கோடரியுடன் தகராறு: சிங்கப்பூரில் தமிழர் கைது

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாலையில் கோடரியுடன் தகராறில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி ஒருவர் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூர் நகரில் உள்ள ஸ்டாம்பர்ட் ரோடு, விக்டோரியா ரோடு சந்திப்பில் கையில் கோடரியுடன் இளைஞர் ஒருவர் தகராஜில் ஈடுபட்டார். இதில் 71 வயது முதியவர் காயமடைந்தார். அங்கு வந்த காவல்துறை வாகனத்தை நோக்கி அவர் ஆயுதத்துடன் நடந்து சென்றார். அப்போது, போலீசார் துப்பாக்கி எடுத்து அவரை நோக்கி குறி பார்த்தனர். இதையடுத்து, கோடரியை அவர் தூக்கி எறிந்து விட்டார். இதை தொடர்ந்து மனோகர் திருநாவுக்கரசு( 25) என்ற அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. அவரிடம் இருந்த கோடரியும் கைப்பற்றப்பட்டது.

The post கோடரியுடன் தகராறு: சிங்கப்பூரில் தமிழர் கைது appeared first on Dinakaran.

Tags : Singapore ,Stampede ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூரில் வாடகை பங்களா விவகாரம் 2...