×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட பாஜ ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகிக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை எந்த விதத்திலும் வெளியிட பாஜ ஐ.டி. பிரிவு தலைவராக இருந்த சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை கூறி தமிழ்நாடு பாஜ ஐ.டி.பிரிவு தலைவர் ( அதிமுக) நிர்மல் குமார் டிவிட்டரில் பதிவிட்டார். இது தொடர்பாக பேட்டியும் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தம்மை குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரியும் ரூ.2 கோரி இழப்பீடு வழங்க கோரியும் செந்தபாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறாக குற்றம்சாட்டப்படுகிறது.
மனுதாரரான அமைச்சர் குறித்த அவதூறு கருத்துகளை நீக்கிவிட்டால் இந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர், முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது என்றார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிடவும், பிரசுரிக்கவும், பரிமாற்றம் செய்யவும் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை விதிக்கப்படுகிறது. டிவிட்டரில் அவர் ஏற்கனவே பதிவிட்டுள்ள 5 ஆட்சேபனைக்குரிய பதிவுகளையும், யுடியூப் பதிவுகளையும் நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட பாஜ ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகிக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Baja ID ,Balaji ,Chennai ,Baja UN ,Senthilbalaji ,TD C. ,TD R.R. ,Senthil ,Court ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம்...