×

காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை உறுதி

சென்னை: காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை உறுதியானது. சைதாப்பேட்டை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது. 2014-ல் எண்ணி ஏழு நாள் படத்தை தயாரிக்க பி.வி.பி. கேப்பிட்டல் நிறுவனத்திடம் லிங்குசாமி ரூ.1.03 கோடி கடன் பெற்றார். கடனுக்கான தொகையில் ரூ.35 லட்சத்தை லிங்குசாமி காசோலையாக பி.வி.பி. நிறுவனத்துக்கு கொடுத்துள்ளார். வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியதால் இயக்குனர் லிங்குசாமி மீது பி.வி.பி. நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. பி.வி.பி. நிறுவனம் தொடர்ந்த வழக்கில் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை உறுதி appeared first on Dinakaran.

Tags : Lingusamy ,Chennai ,Saithapet court ,Dinakaran ,
× RELATED பையா ரீ-ரிலீஸ் மகிழ்ச்சி அளித்திருக்கிறது: கூறுகின்றனர் கார்த்தி, தமன்னா