×

பெட்ரோல் பங்க் மேனேஜரிடம் ₹ 2.50 லட்சம் வழிப்பறி: டிக்-டாக் பிரபலம் உள்பட 2 பேர் கைது

t

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே பெட்ரோல் பங்க் மேனேஜரை தாக்கி ₹2.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த டிக்-டாக் பிரபலம் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கணியாபுரத்தில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு ஷா என்பவர் மேனேஜராக உள்ளார். கடந்த மார்ச் 23ம் தேதி வங்கியில் பணம் போடுவதற்காக அவர் ரூ.2.50 லட்சத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். வழியில் ஸ்கூட்டரில் வந்த 2 பேர் ஷாவை வழிமறித்து, கடுமையாக தாக்கியதோடு ரூ.2.50 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து மங்கலபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் திருச்சூரில் 2 பேரை கைது செய்தனர். அவர்கள் திருவனந்தபுரம் கிளிமானூர் பகுதியை சேர்ந்த வினீத் (26), அவரது கூட்டாளி ஜித்து (22) என தெரியவந்தது. வினீத் டிக் டாக் பிரபலம் ஆவார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

வினீத் மீது திருவனந்தபுரத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்பட 12 குற்ற வழக்குகள் உள்ளன. விசாரணைக்கு பின் போலீசார் 2 பேரையும் ஆற்றிங்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வினீத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

The post பெட்ரோல் பங்க் மேனேஜரிடம் ₹ 2.50 லட்சம் வழிப்பறி: டிக்-டாக் பிரபலம் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tik ,Tok ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED டிக்டாக் செயலிக்கு 9 மாதங்கள் கெடு விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்!!