×

பரமத்தி ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

பரமத்திவேலூர், ஏப்.12: பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட கந்தம்பாளையம் மற்றும் நடந்தையில், ஒன்றிய திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, ஒன்றிய குழு உறுப்பினர் கேப்டன் துரைசாமி, மாவட்ட பிரதிநிதி குணசேகரன், மணிவண்ணன், ஊராட்சி செயலாளர் சக்திவேல், அரங்க பழனிசாமி, மாணவர் அணி அமைப்பாளர் சத்யராஜ், அவைத் தலைவர் செல்வராஜ், பிரபாகரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பரமத்தி ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Paramathi Union ,Paramathivelur ,Nemor Pandal ,Union DMK ,Gandhampalayam ,Paramaththi union ,Dinakaran ,
× RELATED மின்சாரம் தாக்கி தொழிலாளி காயம்