×

காங்கயம் நகராட்சி கூட்ட அரங்கிற்கு ஸ்பீக்கர் மைக் வைக்க ரூ.3.30 லட்சம் நிதி ஒதுக்கீடு

காங்கயம், ஏப். 12: காங்கயம் நகராட்சி கூட்ட அரங்கிற்கு ஸ்பீக்கர் மைக் வைக்க ரூ.3.30 லட்சம் நிதி ஒதுக்கீடு காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர்மன்ற கூட்ட அரங்கம் செயல்பட்டு வருகிறது. மன்றக்கூட்டம் நடைபெறும் பொழுது மன்ற நிகழ்ச்சியை ஒலி பெருக்கி மூலமே ஒலி பரப்பப்பட்டு வந்தது. போதிய ஸ்பீக்கர் வசதி இல்லாததால் ஒலி பெருக்கி மூலம் வாசிக்கப்படும் நிகழ்ச்சி நிரல்கள் உறுப்பினர்களுக்கு சென்றடைவதில் சிரமங்கள் ஏற்படுகிறது.

இந்த உபகரணங்கள் வாங்கப்பட்டு பல வருடங்களுக்கு மேல் ஆவதால் செயல்படுவதில் பிரச்னைகள் உருவாகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு, புதியதாக கூட்ட அரங்கைச் சுற்றிலும் புதியதாக ஸ்பீக்கர் அமைத்தும், புதியதாக மைக் தருவிப்பதும் அவசிமாகிறது. மேற்காணும் பணிகளை மேற்கொள்ள ஆகும் செலவினத் தொகை ரூ.3.30 லட்சம் தொகையை பொதுநிதியில் இருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The post காங்கயம் நகராட்சி கூட்ட அரங்கிற்கு ஸ்பீக்கர் மைக் வைக்க ரூ.3.30 லட்சம் நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Mike ,Kangayam Municipal Meeting Arena ,Kangayam ,Dinakaran ,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...