- ஆச்சிராம்பாக்கம் ஒன்றியம்
- சட்டமன்ற உறுப்பினர்
- மதுராந்தகம்
- கடமலைப்புதூர் ஊராட்சி
- செங்கல்பட்டு மாவட்டம்
- ஆச்சிருபாக்கம்
- தின மலர்
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள கடமலைப்புத்தூர் ஊராட்சியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்னை இருந்து வந்தது. இதனால், அப்பகுதி மக்கள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வசந்தா கோகுலக்கண்ணனிடம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து ரூ.17.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, நடவடிக்கை மேற்கொண்டு நீர்தேக்கத்தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அச்சிறுப்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட கவுன்சிலர் வசந்தா கோகுலக்கண்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் பொன்மலர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தனர். முன்னதாக ஒரத்தி கிராமத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை மற்றும் மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் சமையல் கூடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் கோகுலக்கண்ணன், அச்சிறுப்பாக்கம் பேரூர் செயலாளர் எழிலரசன், அவைத்தலைவர் ரத்தினவேலு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாரதி, சிவக்குமார், ஊராட்சிமன்றத் தலைவர்கள் சாவித்திரி சங்கர், பாலாஜி, ராஜன் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
The post அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.