மதுரை: தஞ்சையில் கோயில் சிலை கடத்தப்பட்ட வழக்கில் 3 பேருக்கு விதித்த தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது. கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து ஐஸ்டின், ஆல்ட்ரின் பிரபு, திவாகர் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். சிலை கடத்தல் வழக்கில் கும்பகோணம் கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.