×

ரயில்வே நுழைவு பாலம் சீரமைக்கும் பணி: ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஏப். 11: ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள மின்சார பராமரிப்பு முதுநிலை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று காலை சதர்ன் ரயில்வே எம்பிளாய்ஸ் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் ஈரோடு கோட்ட பொறுப்பாளர் தர்மன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் மயில்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ரயில்வே எலக்ட்ரிக்கல் தொழிலாளர்களின் பணியிடங்களை சரண்டர் செய்யக்கூடாது. நிரப்பப்படாமல் இருக்கும் 90 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அவுட்சோர்சிங் என்ற பெயரில் தனியாரிடம் பணிகளை ஒப்படைக்க கூடாது. பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சேலம் ரயில்வே கோட்ட எலக்ட்ரிக்கல் நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ரயில்வே ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post ரயில்வே நுழைவு பாலம் சீரமைக்கும் பணி: ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Chief Engineer of Electrical Maintenance ,Erode Railway Colony ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது