×

பணப்பிரச்னை கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஜெயங்கொண்டம், ஏப்.11: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சந்திரகாசன் மகன் குமார் (45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கரைமேடு வடிவேல் என்பவரது மகன் பாலகிருஷ்ணன் (43) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் குமார் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்ததாகவும், இருப்பினும் தொடர்ந்து பாலகிருஷ்ணன் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டினாராம். மேலும் குமார் செங்குந்தபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி வண்டி டேங்க் கவரில் வைத்திருந்த ரூ 2 ஆயிரம் பணத்தையும் பறித்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து குமார் ஜெயங்கொண்டம் போலீசில் அளித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பணப்பிரச்னை கொலை மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Jayangkondam ,Chandrakasan ,Kumar ,Pudukudi ,Jayangondam ,Ariyalur district.… ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே அம்மன் கழுத்தில்...