×

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முற்றுகை

மயிலாடுதுறை,ஏப்.11: மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், இயற்கை விவசாயி ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினர். அப்போது நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்தின்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீரென நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,communists ,Marxist Communist Party ,Marxist ,
× RELATED கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும்...