×

குலாம் நபி கூறிய விரும்பத்தகாத தொழிலதிபர் தொடர்பு பற்றி ராகுல் விளக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் கேள்வி

பாட்னா: குலாம் நபி ஆசாத் கூறிய விரும்பத்தகாத தொழிலதிபர்கள் உடனான தொடர்பு பற்றி ராகுல் காந்தி விளக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை தொடங்கிய குலாம் நபி ஆசாத் தனியார் மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘’ராகுல் காந்தி உள்பட அவரது குடும்பம் முழுவதுக்கும் தொழில் அதிபர்களுடன் தொடர்பு உள்ளது. இந்த தொழிலதிபர்களை சந்திக்க அவர் எந்த வெளிநாடு கூட செல்வார். என்னால் 10 உதாரணங்கள் கொடுக்க முடியும்,’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத், ‘’ராகுல் எப்போது வெளிநாடு சென்றாலும் அங்கு விரும்பதகாத தொழிலதிபர்களை சந்திப்பதாக குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அந்த தொழிலதிபர்கள் யார்? அவர்களது விருப்பம் என்ன? பிரதமர் மோடிக்கும் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தொழிலதிபர்களை கொண்டு ராகுல் நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார். காங்கிரஸ் தலைவர்கள் செய்த எண்ணற்ற ஊழல்கள் குறித்து ராகுல் ஏன் அமைதி காக்கிறார். குலாம் நபி ஆசாத் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை. ராகுல் காந்தி இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்,’’ என்று கேட்டுள்ளார்.

  • மோடியின் விசுவாசியான ஆசாத்
    காங்கிரஸ் பொது செயலாளரான ஜெய்ராம் ரமேஷ், ‘’ஒவ்வொரு நாளும் தனது உண்மையான குணம் வெளிப்படும் வகையில் குலாம் நபி ஆசாத் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாக மாறி வருகிறார்,’’ என்று கூறியுள்ளார்.

The post குலாம் நபி கூறிய விரும்பத்தகாத தொழிலதிபர் தொடர்பு பற்றி ராகுல் விளக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Rahul ,Ghulam Nabi ,Patna ,Rahul Gandhi ,Ghulam Nabi Azad ,Dinakaran ,
× RELATED வயநாடு தொகுதியை தொடர்ந்து...