×

இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும்: பாமக தலைவர் அன்புமணி கருத்து

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட சமூக வலைத்தளபதிவு: ஆன்லைன் சூதாட்டத்தை தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்த முடிவு மிகவும் தாமதமானது என்றாலும் கூட, அப்பாவி மக்களின் உயிரிழப்புகளைத் தடுக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது. பாமகவின் நிலைப்பாடு தான் வெற்றி பெற்றிருக்கிறது. தற்கொலைகள் இனி நிகழாது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும். நீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட வாய்ப்புள்ள வழக்குகளை முறியடிக்க வேண்டும்.

The post இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும்: பாமக தலைவர் அன்புமணி கருத்து appeared first on Dinakaran.

Tags : BAMA ,President ,Anbumani ,CHENNAI ,PAMC ,Governor ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...