×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

செங்கல்பட்டு: தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுப்பட்டவர்களால் பரபரப்பு நிலவியது.

செங்கல்பட்டு மாவட்டம் அருகே நெடுமரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு பிரமிளா என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு திருமணமாகியுள்ளது. பிரமிளாவிற்கு கடந்த 3ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் கூவத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு வரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி அதிகாலை அறுவை சிகிச்சையின் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாயும் சேயும் நலமாக இருப்பதால் வார்டுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரமிளாவுக்கு மாலை 5ம் தேதி மாலை 4 மணியளவில் வயிறு வீக்கமடைந்துள்ளது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை அளிப்பதாக கூறி அவரை அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு அழைத்து சென்று ஆபரேஷன் செய்துள்ளனர்.

பின்னர் பிரமிளா கண் விழிக்கவில்லை என உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் இன்று காலை 10 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுப்பட்டனர்.

The post செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Government Hospital ,Chengalpattu ,Brinkalputtu ,Stenkalpattu Government Hospital ,
× RELATED வீட்டின் போர்டிகோவில் இருந்து...