×

மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் கண்ணமங்கலம் அருகே ரெட்டிப்பாளையத்தில்

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் மாடு விடும் விழாவில் 200 காளைகள் சீறிப்பாய்ந்தன. கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் மாடு விடும் திருவிழா அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாடு விடும் விழாவை தொடங்கி வைத்து விழாக்குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து வீதியில் 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதில், இலக்கை நோக்கி இளைஞர்கள் மத்தியில் காளைகள் ஆக்ரேஷமாக சீறிப்பாய்ந்து. அதில் ஒரு காளை இளைஞர்கள் மத்தியில் புகுந்ததால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

முடிவில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் ஓடிய காளைகளுக்கு முதல் பரிசுகளாக ₹77ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், 2ம், 3ம், 4ம் பரிகாக ₹66 ஆயிரம், ₹55 ஆயிரம், ₹45 ஆயிரம் உள்ளிட்ட 75பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு குழு தலைவர் பிரகாஷ் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். விழாவில் யாருக்கும் எவ்வித காயமும் எற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் கண்ணமங்கலம் அருகே ரெட்டிப்பாளையத்தில் appeared first on Dinakaran.

Tags : Reddipalayam ,Kannamangalam ,Reddipalayam village ,Redtipalayam ,Dinakaran ,
× RELATED பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் சாவு