×

ஆங்கிலம் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் அதிரடி கைதுசெய்யாறு அருகே பிரம்மதேசத்தில் பரபரப்புடிப்ளமோ அக்குபஞ்சர் படித்து 3 ஆண்டுகளாக

செய்யாறு, ஏப். 9: செய்யாறு அருகே பிரம்மதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஆங்கிலம் மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகா பகுதியில் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் பா.முருகேஷுக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதன்பேரில் கலெக்டர் உத்தரவின்படி செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் சந்திரன் தலைமையில் ராஜசேகரன், ஆனந்தன் குழுவினர் நேற்று பிரம்மதேசம், வெம்பாக்கம், மோரணம், தூசி உள்ளிட்ட பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது பிரம்மதேசம் கிராமத்தில் டிப்ளமோ அக்குபஞ்சர் படித்த சுரேஷ்பாபு(43) என்பவர் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து விசாரணை செய்தபோது டிப்ளமோ அக்குபஞ்சர் படித்துவிட்டு கடந்த 3 ஆண்டுகளாக ஆங்கிலம் மருத்துவ சிகிச்சை பார்ப்பது தெரியவந்தது. முறையாக மருத்துவம் படிக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவர் சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவரான சுரேஷ்பாபுவை கைது செய்து, ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ்பாபுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி டாக்டரை கைது செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆங்கிலம் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் அதிரடி கைது
செய்யாறு அருகே பிரம்மதேசத்தில் பரபரப்பு
டிப்ளமோ அக்குபஞ்சர் படித்து 3 ஆண்டுகளாக
appeared first on Dinakaran.

Tags : Brahmadesa ,Sueyyar ,Seyyar ,Cheyyar ,
× RELATED செய்யாறு அருகே கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு..!!