×

(வேலூர்) குடிநீர் தேடி வழி தவறி வந்த மான் மீட்புகுடியாத்தத்தில்

குடியாத்தம், ஏப். 9: குடியாத்தத்தில் குடிநீர் தேடி வழி தவறி வந்த ஆண் மானை பிடித்து வனத்துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரை ஒட்டி தமிழக- ஆந்திர மாநில எல்லையில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை குடிநீர் தேடி வழி தவறி புள்ளிமான் ஒன்று குடியாத்தம் நகரின் மைய பகுதியான சந்தப்பேட்டை பகுதியில் புகுந்தது. மானை பார்த்ததும் தெரு நாய்கள் துரத்திக் கொண்டிருந்த நிலையில் அவ்வழியாக வந்த பொதுமக்கள் மானை மீட்டு குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் 3 வயதுடைய ஆண் மானை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து குடியாத்தம் வனப்பகுதியில் விட்டனர். நள்ளிரவில் நகரின் மைய பகுதிக்குள் வந்த மானால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post (வேலூர்) குடிநீர் தேடி வழி தவறி வந்த மான் மீட்பு
குடியாத்தத்தில்
appeared first on Dinakaran.

Tags : Velur ,Kudiatham ,Gudiatham ,
× RELATED பண்ணையில் 2,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின குடியாத்தம் அருகே பரிதாபம்