- கோயம்ப்டு சந்தை
- வியாபாரிகள் ஒன்றியம்
- அண்ணாநகர்
- தமிழ்நாடு விற்பனையாளர்கள் ஒன்றியம்
- கோயம்பேடு சந்தை
- யூனியன்
- தின மலர்
அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில், வாகன நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர், அங்காடி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில், 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நேற்று காலை அங்காடி நிர்வாக அலுவலகத்தில், வாகன நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: கோயம்பேடு மார்க்கெட்டில் வாகன நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் வாகன நுழைவு கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மார்க்கெட் வளாகத்தில் குடிநீர், மருத்துவமனை மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வியாபாரிகள் சங்க பேரவை மனு appeared first on Dinakaran.