×

வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்கள் கைது

சென்னை: மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு, ஐஸ்வர்யா நகர், தமிழ்குரஞ்சூர், கே.ஆர்.பாளையம், மவுத்தம்பேடு, செப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடுபவதாக போலீசாருக்கு ஏராளமான புகார் வந்தன. இதையடுத்து, ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், மீஞ்சூர் எஸ்.ஐ. விஜய் முத்துகுமார் மற்றும் போலீசார், இவர்களுடன் அப்பகுதி வாலிபர்கள் இணைந்து தினமும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், புதுப்பேடு பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சி செய்துள்ளனர். இதை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர்கள் பார்த்துள்ளனர். உடனே, மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ விஜய் முத்துகுமார் மற்றும் போலீசார் சந்திரசேகர், அருண்குமார், தினேஷ் ராஜா, அரவிந்த் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், அப்பகுதி மக்களுடன் இணைந்து 2 மர்ம நபர்களை கண்காணித்தனர். இதையறிந்த 2 மர்ம நபர்களும் தப்பியோட முயற்சி செய்தனர். மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சர்ச் அருகே மேம்பால பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

பின்னர் இருவரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவர்கள் தண்டையார்பேட்டையை சேர்ந்த ஹரிபிரசாத் (23), பஷீர் பாஷா (24) என தெரிய வந்தது. இவர்கள், மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட சுற்று பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து நகை, பணம் உள்ளிட்ட வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்கள் கைதுபல்வேறு பொருட்களை திருடியதும், அவற்றை விற்று உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், இந்த திருட்டு முயற்சியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Puduppedu ,Aishwarya Nagar ,Tamil Kuranjoor ,KR Palayam ,Mauthampedu ,Cheppakkam ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...