×

இவ்வளவு கீழ்த்தரமாவா பேசுவீங்க? சிந்தியா, ஆசாத்துக்கு அசோக் கெலாட் பதிலடி

ஜெய்ப்பூர்: ராகுல் காந்தி குறித்து விமர்சித்த ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் குலாம் நபி ஆசாத்துக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதிலடி தந்துள்ளார். கடந்த 2020ல் காங்கிரசில் இருந்து பாஜவில் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, ஒருகாலத்தில் ராகுலுக்கு மிக நெருக்கமாக இருந்தவர். ராகுல் மீதான அவதூறு வழக்கில் மேல்முறையீடு குறித்து இவர் தனது பேட்டியில், ‘நாட்டிற்கு எதிராக செயல்படும் துரோகி ராகுல்’ என குற்றம்சாட்டினார். இதே போல், கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத், ‘காங்கிரசில் நீடிக்க முதுகெலும்பு இல்லாதவராக இருக்க வேண்டும்’ என்றார்.

இது குறித்து பதிலளித்துள்ள ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், ‘‘எத்தனையோ தாக்குதல்களுக்கு மத்தியிலும் மக்களுக்காக குரல் எழுப்புவதில் இருந்து ராகுல் பின்வாங்காததால் பாஜவினர் சோர்வடைந்துள்ளனர். எந்த சித்தாந்த்துக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடுவோம் என சபதம் செய்தார்களோ இன்று பாஜ தலைவர்களின் வேண்டுகோளின்படி அதே பாசிச சித்தாந்தத்திற்கு ஆதரவாக நிற்கிறார்கள். இவர்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான வார்த்தைகளை பேசுவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை’’ என கூறி உள்ளார்.

The post இவ்வளவு கீழ்த்தரமாவா பேசுவீங்க? சிந்தியா, ஆசாத்துக்கு அசோக் கெலாட் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Ashok Khelat ,Scindia, Azad ,Jaipur ,Rajasthan ,Chief Minister ,Jyotiraditya Scindia ,Ghulam Nabi Azad ,Rahul Gandhi ,Scindia ,Azad ,
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...