×

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை: சிசிடிவி கேமராவில் பதிவு

கோத்தகிரி: கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகர் பகுதியில் குடியிருப்பு அருகே உலா வரும் சிறுத்தையின் சிசிடிவி கேமரா பதிவு குடியிருப்பு வாசிகளை அச்சமடைய செய்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு அருகே உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று உலா வந்தது.

நீண்ட நேரம் குடியிருப்பிற்கு வெளியே உள்ள சாலையில் உலா வந்து ஏதேனும் உணவு கிடைக்குமா? என சிறுது நேரம் நோட்டமிட்டுவிட்டு பின்பு வனப்பகுதிக்குள் ஓடியது. இந்த காட்சியானது குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது இப்பகுதி குடியிருப்பு வாசிகளை அச்சமடைய செய்துள்ளது. எனவே, வனத்துறையினர் அரவேனு பெரியார் நகர் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை: சிசிடிவி கேமராவில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Gothagiri ,Arvenu Periyar Nagar ,Kotakiri ,
× RELATED கோத்தகிரியில் தெரு நாடகம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு