×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 அறைகள் தரைமட்டம்

சாத்தூர்: சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் எரிந்து நாசமாகின. இரவு நேரம் என்பதால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே, ஒத்தையால் கிராமத்தில் உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 14 அறைகள் உள்ளன. டிஆர்ஓ உரிமம் பெற்ற இந்த ஆலையில் கம்பி மத்தாப்பு, பென்சில் மத்தாப்பு, சாட்டை, தரைச்சக்கரம் ஆகிய வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப்பொருள் வைத்திருந்த அறையில், நேற்று நள்ளிரவு திடீரென வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகிலிருந்த அறைகளுக்கும் பரவியது. இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சாத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 3 அறைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இரவு நேரம் என்பதால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 அறைகள் தரைமட்டம் appeared first on Dinakaran.

Tags : Sattur ,Satur ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது