×

கோவில்பட்டியில் பைக் திருடிய இருவர் கைது

கோவில்பட்டி, ஏப். 7: கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் செந்தில்குமார் (34). இவர், கடந்த 4ம் தேதி தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (37), பாலசுப்பிரமணியன் (50) ஆகிய இருவரும் சேர்ந்து பைக் திருடியது தெரிய வந்தது. இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜென்சி வழக்கு பதிந்து கருப்பசாமி, பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கோவில்பட்டியில் பைக் திருடிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Senthilkumar ,Subpaiah ,Kovilpatti Natarajapuram ,
× RELATED கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழாவில் நற்கருணை பவனி