×

பொன்னமராவதி வலையப்பட்டி வையாபுரி மலையாண்டி சுவாமி கோயில் பங்குனி திருவிழா

பொன்னமராவதி,ஏப்.7: பொன்னமராவதி வலையப்பட்டி வையாபுரி மலையாண்டி சுவாமி கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு காலையில் முதலே மலையாண்டி, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதன்பின் இரவு புஷ்ப அலங்காரத்தில் கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட மலையாண்டி சுவாமி மற்றும் வெள்ளி வேலுடன் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post பொன்னமராவதி வலையப்பட்டி வையாபுரி மலையாண்டி சுவாமி கோயில் பங்குனி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Ponnamaravathi Velayapatti Vaiyapuri Malayandi Swami Temple Panguni Festival ,Ponnamaravati ,Ponnamaravati Velayapatti Vaiyapuri Malayandi Swami Temple panguni festival ,Subramanya ,Swami ,
× RELATED பொன்னமராவதியில் இருந்து...