×

கஞ்சா வைத்திருந்த பெயிண்டர் கைது

பெ.நா.பாளையம். ஏப்.7: கோவை கவுண்டம்பாளையம் எஸ்கேஆர் பூங்கா அருகே துடியலூர் போலீசார் ரோந்து மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகம்படும் படியாக நின்று இருந்த வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா மற்றும் பணம் ரூ.65 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், கவுண்டம்பாளையம் பொங்காளியம்மன் வீதி முதல் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (32). என்பதும், பெயின்டிங் வேலை செய்து வருவதும், ஆந்திர மாநிலம் குச்சிபாளையத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து கோவையில் பல பகுதியில் விற்றது தெரியவந்தது. மேலும் வினோத்குமார் மீது துடியலூர் காவல் நிலையத்தில் 2021-22ம் ஆண்டில் அடிதடி மற்றும் கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா வைத்திருந்த பெயிண்டர் கைது appeared first on Dinakaran.

Tags : P. Na. Palayam ,Dudiyalur ,Goundampalayam SKR Park, Coimbatore ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர்...