×

ஆயுதப்படை போலீசார் 59 பேர் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம்

ஈரோடு, ஏப். 7: ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய 59 போலீசார், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசார், பணியிட மாறுதல் கேட்டு விருப்பம் தெரிவித்திருந்தனர். இதன்பேரில், மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய எஸ்எஸ்ஐ தங்கராஜ், தலைமை காவலர்கள் பிரபு, சக்திவேலாயுதசாமி, சுரேஷ்குமார், சிவக்குமார், முத்துக்கிருஷ்ணன், சரவணன், காமராஜன், பெண் தலைமைக்காவலர் பாண்டிஜோதி மற்றும் போலீசார் என 59 பேர் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தி ஆகிய 5 போலீஸ் சப்-டிவிசன்களுக்கு கீழ் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிட மாற்றம் செய்து, எஸ்பி சசி மோகன் உத்தரவிட்டார். இதில், பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட 59 பேரில், 7 பேர் பெண் போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது. இடமாற்றம் செய்யப்பட்ட 59 பேரும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும், போலீஸ் குடியிருப்பையும் காலி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ஆயுதப்படை போலீசார் 59 பேர் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Armed Forces ,Erode ,District Armed Forces ,Dinakaran ,
× RELATED அரியலூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!!