×

காஞ்சிபுரத்தில் 200 பெண்களுக்கு கறவை மாடுகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், 200 பெண்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கறவை மாடுகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுகோட்டை பகுதியில் அமைந்துள்ள ஹீண்டாய் கார் தொழிற்சாலையின் சமூக பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் லிமிடெட் சார்பில், கிராமப்புற மேம்பாடுக்களுக்காக பல்வேறு சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பவுண்டேஷன் முன்னேற்றம் எனும் நோக்குடன் செயல்பட்டு‌ வருகிறது. குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் காரணிகளை கண்டறிந்தபோது, கால்நடை வளர்ப்பு மட்டுமே இவர்களை உயர்த்தும் என கண்டறியப்பட்டதின் விளைவாக முதல் கட்டமாக இருங்காட்டுகோட்டை கிராம பகுதியிலுள்ள 53 பயனாளிகளுக்கு பசுமாடு மற்றும் கன்று குட்டி வழங்கப்பட்டது.

மேலும், அவர்களுக்கு தீவன உற்பத்தி, பால் கறப்பு, மதிப்பு கூட்டு பொருள் உற்பத்தி, கால்நடை காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வருவாய் வருவது உறுதி செய்யப்பட்டது. இத்திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், 200 குடும்ப பெண்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகள் வழங்கப்பட்டு, அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதற்கான நிறைவு விழா கலியனூரில் உள்ள ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் கவிதா, ஹீண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் அறக்கட்டளை அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பாக பயிற்சி எடுத்து பல்வேறு திறன்களை வெளிபடுத்திய 5 நபர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள், ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் 200 பெண்களுக்கு கறவை மாடுகள் appeared first on Dinakaran.

Tags : Kangipura ,Kanchipuram ,Karangatukotta ,Kanchipuram District ,Kancheepuram ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...