×

அரசு காப்பகத்தில் இருந்து 6 பெண்கள் தப்பியோட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு பெண்கள் காப்பகத்தில் இருந்து 6 பெண்கள் திடீர் தப்பி ஓட்டம் பிடித்துள்ள சாம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையம் பகுதியில் அன்னை சத்யா குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு, ஆதரவற்ற பெண்கள் தங்கள் கல்வி நிலையை தொடர இங்கு தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர். மேலும், வழக்கு மற்றும் காதல் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி வயது குறைந்த நிலையில் உள்ளவர்களை மீட்கப்பட்டு, இந்த காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சுமார் 20 மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், காப்பகத்தில் நேற்று முன்தினம் வழக்கம்போல் அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு தூங்க சென்றுள்ளனர்.

அப்போது, இரவு பணியில் இருந்த பாதுகாவலரை அறையில் தாழிட்டுவிட்டு, நேற்று அதிகாலையில் அங்கிருந்து 6 பெண்களும் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து காப்பகம் சார்பில், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாகவே சிறார் காப்பகத்தில் இருந்து சிறுவர்கள் மட்டுமே அடிக்கடி தப்பியோடும் நிலையில், தற்போது பெண்கள் காப்பகத்திலும் இந்நிலை துவங்கியது வருத்தமளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

The post அரசு காப்பகத்தில் இருந்து 6 பெண்கள் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Government Archive ,Kanchipuram ,Kanchipuram Government Women's Incumbent ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...