×

வாடிக்கையாளரின் ஆவணத்தை திருடி டிவி, வாஷிங் மிஷின் வாங்கி மோசடி: பிரபல ஷோரூம் ஊழியர் கைது

துரைப்பாக்கம்: வாடிக்கையாளரின் ஆவணங்களை திருடி, விலை உயர்ந்த செல்போன், எல்இடி டிவி, வாஷிங் மிஷின் வாங்கிய, பிரபல எலக்ட்ரானிக் ஷோரூம் ஊழியர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (32). இவர், பெருங்குடியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக் ஷோரூமில் பணியாற்றி வந்தார். இந்த ஷோரூமில் மாதத்தவணையில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் நிதியுதவி அளித்து வருகிறது. இவ்வாறு மாதத்தவணையில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு, பான் கார்டு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அந்த பைனான்ஸ் நிறுவனத்தில் ஒப்படைப்பது வழக்கம்.இந்நிலையில், ஷோரூம் ஊழியர் வீரமணி, தனது நண்பர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஸ்டீபன் (37) என்பவருடன் சேர்ந்து, ஷோரூமில் வாடிக்கையாளர்கள் அளிக்கும் ஆவணங்களை திருடி, அதில் வேறு ஒருவர் புகைப்படத்தை ஒட்டி, அதே ஷோரூமில் விலை உயர்ந்த செல்போன், எல்இடி டிவி, வாஷிங் மிஷின் ஆகியவற்றை வாங்கியுள்ளனர். இதுபற்றி அறிந்த பைனான்ஸ்  நிறுவன உதவி மேலாளர் சீனிவாசன், நேற்று முன்தினம் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, ஷோரூம் ஊழியர் வீரமணி மற்றும் ஸ்டீபனை நேற்று கைது செய்தனர். விசாரணையில், வீரமணி தனது நண்பர் ஸ்டீபனுடன் சேர்ந்து, வாடிக்கையாளர்களின் ஆவணங்களை திருடி அதன்மூலம் இதுவரை ரூ.1.53 மதிப்புள்ள செல்போன், எல்இடி டிவி, வாஷிங் மிஷின் ஆகியவற்றை வாங்கியது தெரியவந்தது. பின்னர், அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  இவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்….

The post வாடிக்கையாளரின் ஆவணத்தை திருடி டிவி, வாஷிங் மிஷின் வாங்கி மோசடி: பிரபல ஷோரூம் ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Duraipak ,
× RELATED மாநகர பேருந்து நடத்துனரிடம் ரூ.14,000 டிக்கெட் திருட்டு