புதுடெல்லி: கடந்த 1988ம் ஆண்டு சாலையில் நடந்த மோதல் தொடர்பான கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறை தண்டனை பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து ஏப்.1ம் தேதி பாட்டியாலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். நேற்று அவர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பரியங்காவை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பதிவில்,’ எனது வழிகாட்டியான ராகுல் மற்றும் நண்பர், தத்துவவாதி, வழிகாட்டி பிரியங்கா ஆகியோரை புதுடெல்லியில் சந்தித்தேன். நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம், மிரட்டலாம், எனது நிதிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கலாம். ஆனால் எனது தலைவர்களுக்கான எனது அர்ப்பணிப்பை ஒரு அங்குலம் அசைக்கவோ, பின்வாங்கவோ முடியாது’ என்று சித்து பதிவிட்டுள்ளார்.
The post ராகுல், பிரியங்காவை சந்தித்தார் சித்து appeared first on Dinakaran.